நெறைய பேச வேண்டி இருக்குங்க...ஊருக்குள்ள அம்புட்டு நடக்குது...ஆனா எல்லாத்தையும் கவனிக்கவும் மாத்தவும் யாருக்குங்க நேரம் இருக்கு நமக்கு இருக்குற வேலைய பாக்குறதுக்கே நேரம் சரியா இருக்கு...இருந்தாலும் சில விசயமெல்லாம் சொல்லித் தான் ஆக வேண்டி இருக்குங்க...என்ன பண்றது நாட்டு நெலம அப்படி இருக்கு...
 
எல்லாம் ஆரம்பிச்சது இந்த டாடா கம்பெனிகாரன் வெளம்பரத்துல தானுங்க. ஏதோ 'டாடா வாட்டர் பிளஸ்' ஆம்...இது தண்ணிக்கும் மேலேயாம்...அப்படின்னு அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க...அட என்னடா இது தண்ணின்னு சொல்றானுங்க ஆனா தண்ணிக்கும் மேல அபப்டின்னு சொல்றானுங்களே...அப்படி என்னத்தான் இருக்குன்னு பார்த்தோம்னா...அந்த தண்ணில செம்பு இருக்காம். அது உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய கூட்டிடுதாம்...அதனால அந்த தண்ணிய குடிச்சா ஆரோக்கியமா இருப்போமாம். இப்படி சொல்லி தண்ணிய பாட்டிலே அடைச்சி வியாபாரம் பண்ண வந்துட்டானுங்க.
 
ஆகா நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தண்ணீரா...மாபெரும் கண்டுபிடிப்பு அப்படின்னு கொண்டாடி இருக்கலாம் தான்...ஆனா பிரச்சனை என்னன்னா இது ஒண்ணும் புதிய விசயமே இல்லை அப்படிங்கிறது தான்.
 
சின்ன வயசுல எங்க வீட்ல எல்லாம் தண்ணிய செம்புப் பானைல தான் வச்சி இருப்பாங்க...அந்த தண்ணிய குடிச்சிபுட்டு ஆடாத ஆட்டமும் இல்லை...சுத்தாத இடமும் இல்லை...தண்ணி மாறிடுச்சி அதுனால உடம்புக்கு சேரல அப்படின்னு படுத்ததும் கிடையாது. ஆடுற இடத்துல எல்லாம் தண்ணி எங்க கிடைக்குமோ அங்க எல்லாம் கிடைக்குற தண்ணிய குடிச்சிபுட்டு ஆடிகிட்டே இருப்போம்.
 
ஆனா பாருங்க மக்களே...ஒழுங்கா இருந்தவனுங்ககிட்ட 'உங்க தண்ணில கிருமி இருக்கு...குடிச்சா நோய் வரும்' அப்படின்னு பீதிய கிளப்பியே 'மினெரல் வாட்டர்' ஐ வியாபாரம் பண்ண ஆரம்பிச்சானுங்க...கூடவே தண்ணீர் ஐ சுத்தப்படுத்தும் கருவிகள் அப்படின்னு இன்னொரு பக்கமும் வியாபாரத்த பெருக்குனானுங்க. கிருமி, நோய் அப்படின்னு பயத்த உண்டு பண்ணியே நம்மகிட்ட இருந்தத அழிச்சிபுட்டு அவனுக்கு எது காச தருமோ அத தலைல கட்டுனானுங்க.
 
என்ன ஆச்சி மக்கழே...இப்ப எல்லா வீட்லயும் அவனுங்க குடுக்குற மினெரல் வாட்டர் தான். ஆனா குழந்தைங்க ஆரோக்கியமா இருக்குதுங்களா...ஒரு வீட்டு தண்ணிய குடிச்சுட்டு அடுத்த வீட்டு தண்ணிய குடிச்சாலே தண்ணி சேரல அப்படின்னு நோயில் படுத்துடுதுங்க...நோய் எதிர்ப்பு சக்தி அப்படின்னு ஒண்ணு ஊசியோ இல்லை மாத்திர போட்டாலோ தான் வருது...இயற்கையாவே நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய குழந்தைகள் கிட்ட ரொம்ப கம்மியாயிடுச்சி. அதாவது காசையும் குடுத்துபுட்டு நம்மள நம்மளே நோயாளியாவும் ஆக்கிக்கிறோம்.
 
இப்ப பாருங்க மக்கழே...
 
நம்ம முன்னாடி எத வழக்கமா வச்சி இருந்தோமோ...அதையையே ஏதோ புதுசு மாதிரி நம்மகிட்டயே வந்து விக்குறானுங்க...செம்பு கலந்த தண்ணிய குடிச்சா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா ஆகுமாம் (டேய்...அதைத் தான்டா நாங்க மொதல குடிச்சிக்கிட்டு இருந்தோம்). ஆனா இந்த ரெண்டுக்கும் நடுவுல என்ன நடந்து இருக்குனு நீங்களே பார்த்துகோங்க மக்கழே...
 
1) நம்மகிட்ட இயல்பாகவே இருந்த ஒரு அறிவை பயத்தால் இழந்து இருக்கோம்.
2) இலவசமாக குடிச்சிக்கிட்டு இருந்த தண்ணிய காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சி இருக்கோம்.
3) ஆரோக்கியமான ஒரு சமூகம் நோய்வாய்பட்ட ஒரு சமூகமா மாறி இருக்கோம்.
 
இப்ப நம்ம எத தொலச்சோமோ அதையே புது வியாபாரமா கொண்டு வந்து இருக்கானுங்க...இலவசமா எத குடிச்சிக்கிட்டு இருந்தோமோ அத இப்ப காச கொடுத்து குடிக்க சொல்றானுங்க...அம்புட்டு தான் மக்கழே...இது நியாயமா மக்கழே...விட்டா எங்கள் காற்று காற்றுக்கும் மேலே...இதில் ஆக்சிஜென் இருக்குது அப்படின்னு சொல்லி காத்தையும் விப்பானுங்க...இது நியாயமா மக்கழே!!!
 
ஆகையால் மக்கழே...சொந்தமா வீட்டுக்கு வீடு ஒரு செம்புப் பானையை வாங்கி வச்சிகோங்க மக்கழே...ஆரோக்கியமான தண்ணிய இலவசமாகவே குடித்து வளம் பெருக மக்கழே...
 
1) செம்புக் கலந்த தண்ணி இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
2) அதனால் வலுவான புதிய இளைய தலைமுறை வளரும்...அதற்கு காசிருந்தால் தான் தண்ணீர் என்ற நிலை தெரியாது.
3) செம்பு பானைகள் பொதுவாக கனமாக இருப்பதனால் அதனை தூக்கி வைத்து சுமப்பது என்பது உடலுக்கான உடற்பயிற்சியாகவும் அமையும் (குடும்பத் தலைவர்களுக்கு உதவும்)
 
சரி மக்கழே...இப்போ கெளம்புறேன்...அடுத்த பிரசாரத்துல சந்திப்போம்...!!!
 
வரேன் மக்கழே...!!!

1 கருத்துகள்:

//டேய்...அதைத் தான்டா நாங்க மொதல குடிச்சிக்கிட்டு இருந்தோம்//
அப்புறம் எதுக்குடா அதை குடிக்காம விட்டீங்க?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு