கையில் கிட்டிய காகிதத்தில் எல்லாம்
கிறுக்கித் தள்ளுகின்றது
என் காதல்…!!!
*
கிறுக்கிய அனைத்தையும் கவிதை என்றே
ஏற்றும் கொள்ளுகின்றது
உன் காதல்…!!!
*
“கிறுக்கல்கள் எல்லாம் கவிதையா?”
என்று வினவும் தோழிக்கு
“கிறுக்கல்கள் அல்ல…முயற்சிகள்!!!”
என்றுக் கூறியே நகர்கின்றாய்…
*
சிரித்துக்கொண்டே என் முயற்சிகளை கவிதைகளாய்
மொழிப்பெயர்த்துக் கொண்டிருக்கின்றது
நம் காதல்…!!!
*
கா(ஆ)தலால் நானும் கவிஞனாகின்றேன்!!!
என்ன செய்ய…
உலகில் காதல் இருக்கும் வரை
கவிஞர்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை தான்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு