இரவு 11:00 மணி

       நட்சத்திரங்களை நோக்கியபடியே அமர்திருந்தேன். எப்பொழுதும் சிணுங்கி கொண்டு இருக்கும் எனது கைபேசி சலனம் அற்று என் அருகே கிடந்தது, அவளிடம் இருந்து குறுஞ்ச்செய்தியை எதிர்பார்த்து. எப்பொழுதும் பேச்சை ஆண்கள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி போலும். இன்று அந்த விதிக்கு விதிவிலக்கு அளித்துவிட்டு அவள் ஆரம்பிப்பதற்காக காத்திருந்தேன். இன்றாவது  அவள் ஆரம்பிக்கட்டும்.

சிணுங்கியது என் கைபேசி.
சிணுங்கிஇருந்தது அவள்தான் ஒரு குருஞ்செய்தியாய். 
"ஜீஸஸ் ஆடு மேய்தார்! கிருஷ்ணன் மாடு மேய்தார்! நீ என்ன மேய்கிறியோ தெரியல. ஒரு மெசேஜும் காணோம்! குட் நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ்"
மேலோட்டமா பார்த்தால் இது ஒரு ஃபார்வர்ட் மெஸேஜ் தான். ஆனா இதுக்குள் இருந்த உண்மையான அர்த்தம் "கூப்பிடுடா முட்டாள்!!".
நான் முட்டாளாய்  இருந்த காலம் கடந்து வெகு நாட்களாகி விட்டதால் இன்னொரு எச்சரிக்கை மணி எனக்கு தேவைப்படவில்லை.
"மணி எத்தனை தெரியுமா?" எடுத்தவுடன் கேட்டாள் பொய் கோபத்துடன்.
"காலை 6:00 மணி" என்றேன்.
"ஐயோ பாவம்! உனக்கு மணி பார்க்க தெரியாதுன்னு முன்னாடியே சொல்லி இருந்தேனா நானாவது சொல்லி கொடுத்து இருப்பேன்ல" என்றாள்.
"ஹலோ ! மணி எல்லாம் எங்களுக்கு பார்க்க தெரியும். ஆனா பிரச்சனை என்னனா, உன்கிட்ட இருந்து குட்நைட் மெஸேஜ் வந்தா மட்டும் என்னோட கைபேசி அதுவா மணி காலை 6:00னு செட் ஆயிடுது " என்றேன்.
"அப்படியா...!!! அப்படினா அந்த டப்பா கைபேசிய தூக்கி போட்டுட்டு புதுசா ஒண்ணு வாங்க வேண்டியதுதான" என்றாள்
"ஏன் சொல்ல மாட்ட... என்னோட கைபேசிய பத்தி உனக்கு தெரியாது. என் கைபேசி பேசும் தெரியுமா?" என்றேன்.   
 "உன் கைபேசி பேசுமா?... என்னதும் தான் பேசுது. இதோ இப்பக்கூட என்கிட்ட பேசிக்கிட்டு தான் இருக்கு... உன் குரல்ல" என்றாள் சிரித்தபடியே.
"ஹேய் உண்மையைத்தான் சொல்றேன்! அது ஏன் உன்னோட மெஸேஜ் வந்தா மட்டும் அப்படி நேரத்தை மாத்தி வைக்குதுனு ஒரு நாள் சொல்லுச்சி தெரியுமா?"
"அப்படினா அது என்ன சொல்லுச்சினு தயவு பண்ணி சொல்ல முடியுமா!!"
" நிலவு உறங்க போகும் நேரம் தான் பொழுது விடிய ஆரம்பிக்கும். எனவே தான் அவள் உறங்க போகிறேன் என்று செய்தி அனுப்பிய உடனேயே, ஐயகோ தவறான நேரத்தை அல்லவா காட்டிக்கொண்டிருக்கின்றோம்... நிலவு உறங்க போகிறதே... என்று நேரத்தை விடியல் நேரத்திற்கு தோதாக 6: 00 மணி என மாற்றி வைக்கின்றேன். இது தவறா என்றது. இல்லை என்றேன். எனவே இது தொடர்கின்றது!!!" என்றேன்.
எதிர்முனையில் பதிலில்லை. நிலா சற்று அதிக பிரகாசமாகி இருந்தது. அவள் வெட்கப்பட்டு கொண்டு இருந்தாள்.
"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.

2 கருத்துகள்:

really sooopera irundhuchu..... expecting more stories like this in Tamil.... the reason u gave for the time is good.... Indirecta oru kavidhai solli irukka... am i right........ ?

சார், உங்களுக்கு ஏதோ முன் அனுபவம் உள்ளது போல் தெரிகிறது. விரைவில் கண்டு அறிவோம்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு